Wednesday, February 6, 2013

எனது நாள்

எனது நாள் ஒரு பரிசுப்பொருள்
அன்பின் தேனில் நனைந்த ஆனந்தம்
எனது நாள்
தனது முகம் எனக்குக் காட்டாது
என் இதயத்தின் மேல் தன் பாதம் அழுத்தி நிற்கும்
ராட்சசம்
சுழலும் காலத்தின் கையில் சுழலும்
வாள் அநித்யம்
வாழ்வே குறிக்கோளான தேடல்
துழாவும் விரல்நுனி விழிகளின்
ஒளிபட்டு ஓடும் இருள்
சகல நோய்க்கிருமிகளுக்கும் ஆளாகிச்
சிலுவையில் அறைபடும்
நொய்மை
சித்ரவதை நிகழ்வாயிருக்கையில்
ஆனந்தம்,
இருளின் அதலபாதாளத்தில்
தயவாய்க் கசியும் ஈரத்துளியாய்
நெளியும் புழு ஆனால்
சுழலும் காலத்தையும் வாளி்ன் அநித்யத்தையும்
பரிகசிக்கும் பிரமாண்டம் அதன் உயிர்
அது துடிக்கிறது
கடல் நடுவே
அற்பத் தேவைகளின்
ஆசைகளின் தூண்டில் முள்ளில்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP