Tuesday, February 26, 2013

பளு

நீண்ட நேர மேஜை வாசத்தை விட்டு
வெளியே வந்தேன்

பூமி பறந்துவிடாதிருக்க வைத்த பாரங்கள் போல
மரமும் தோப்பும் மலைகளும் புற்களும்.
மனிதர்களின் குடியிருப்பு இல்லங்களும் அவ்வாறே

காற்றில் துடிக்கும் மேஜைவெயிட் அடிக்
காகிதம் போல் ஒரு வேதனை

அன்று உணர்ந்தேன்:
மனிதனை அழுத்திக்கொண்டிருக்கும் பளு
என்னவென்று

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP