Wednesday, February 20, 2013

அவ்வப்போது

திருடர்கள் காவலர்கள் உடையில்
இணக்கவாதிகள் கலகக்காரர்களாய் அபிநயித்து
நலவாழ்வு மற்றும் லகுபுகழின் மடியில்
இருள்சிறை வதைகளின்
கலகக்காரர்களைக் காட்டிக் காட்டியே
புதியவர்களைப் பழக்குகின்றன
பெரியவர்களின் கைவிரல்கள்.
நாம் பார்க்காததா?
எத்துணை பெரிய கடவுளானாலும்
அவரை மண்ணைக் கவ்வ வைக்க
நமக்கா தெரியாது?
கணினிகள் கொட்டிக் கொட்டிக்
கணினிகளாகின்றன பிஞ்சு மூளைகள்.
கலைமகள் திருமகள் அருளாசிகளால்
பெரியதொரு விபச்சார விடுதியாகிவிட்ட
உலகுக்குள்
அவனும் வந்துபோகிறான்
அவ்வப்போது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP