Thursday, February 7, 2013

அந்தியிருள்

அவன் சின்னஞ்சிறு குழந்தையல்லவா?
அந்திதோறும் கவியும் இந்தத் துயரின் அழுத்தம்
எங்கிருந்து வருகிறது? எதற்காக?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளினதுபோல்
அது வான்முட்டி வழிகிறதே எப்படி?
மாபெரும் விடைபெறல் நிகழ்ச்சியா இந்த அந்தி?
ஏன் முடிவுறாது நீள்கிறது இந்நேரம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP