Monday, February 11, 2013

என் உணர்ச்சிகளுக்கு இயைப

என் உணர்ச்சிகளுக்கு இயைப ஒலிக்கும்
என் பேச்சிலும் சொற்களிலும்
கர்வம் கொண்டிருந்தேன் நான்
காடுகளிலும் மலைகளிலும்
சளைக்காமல் ஏறி இறங்கும்
கால்களின் வலிமையில்
மிக்க சந்தோஷம் அடைந்திருந்தேன்
என் முரட்டுக் கைகளின் வழி
ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்
மனித உழைப்பை எண்ணிப்
பெருமிதம் அடைந்திருந்தேன்
அவ்வளவும் எரிந்து சாம்பலாகின
எவருமறியாமல் இரகசியமாய்
என்னைத் தாக்கிய ஒரு ’நோயா’ல்

எனது கைகளில் கால்களில்
என் சொற்களில்
சுகமாய்ப் படுத்துறங்குவதை விட்ட கவிதை
துள்ளி எழுந்தது புதியதொரு கண்டுபிடிப்பைக்
கண்டதுபோல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP