Monday, February 4, 2013

பாவப்பட்ட ஜனங்களில் ஒருத்தி

பாவப்பட்ட ஜனங்களில் ஒருத்தி
சோலையம்மாள்
எந்த மர்மமும் அவளைப் பிடித்துப்
பிழியவில்லை
பொங்கிப் பொங்கி வருகுது ஆனந்தம்
அவளுக்கிந்த வாலைப் பருவத்தில்
பாடப் புத்தகங்களை ஏங்கச் செய்த
தீப்பெட்டிப் பசையாலும் சிறுசிறு சுமைகளாலும்
பாதிக்கப்படாதிருந்தது
அவளது பேதைப் பருவத்திலும் ஆனந்தம்
பாட்டி கதைகள் விடுகதைகள்
பயமறியாக் கன்றின் ஆட்டபாட்டங்களால்
தன் தோழர்களுக்கெல்லாம் ராணி அவள்

கல்யாணமாகியது சோலையம்மாளுக்கு
விநோதமாய் மினுங்கியது
காதிலும் கழுத்திலும் சிறு பொன் அணி
தலையில் எப்போதும் பூச்சரம் முழித்தது
புடவையின் பகட்டும் ஒட்டாமல் சிரித்தது
பொங்கிப் பொங்கித் ததும்பும் அந்த
ஆனந்தம் அப்போதும் அழியாதிருந்தது

சின்னாள் வசந்தம் அவளறியாள்
ஆயிரம் சோலையம்மாள்கள் சரித்திரம்
அவனறிந்தது போல் தோன்றும்
அன்னாள் சிறுவன் அவன் துயர் ஓர் புதிர்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP