Thursday, February 14, 2013

மனித உடல்கள்

தன்னந் தனியாய் நான் கடலோரம் நடந்தபோது
குறுமணல் ஈரம் மனிதச் சதையின் தீண்டல்
பிஞ்சுமேனி
தன் அன்னையைத் தொட்டுணர்ந்த ஞாபகம்
அன்றியும்
ஆனந்தம் தரும் அது என்ன நெகிழ்வு கூச்சம்
இரத்தத்தில் அதிர்ந்தது?

இன்று பல்லக்கின் கீழ்
நான்கு மனிதத் தசைகளின் அசைவையும்
சீரான ரப்பர் டயர் வேக ஊர்தலின் கீழ்
சில மனித உடல்களையும் உணர்வதுபோல்
அந்த இரத்தம் அதிர்கிறது
மதுக்கடை வருமானம் கொண்டு
சம்பளம் வழங்கும் அரசின் ஊழியன் இரத்தம்
சமாதானமடைய
அதற்கும் வேண்டுமோ ஏதாவதொரு போதை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP