Saturday, March 16, 2013

அம்மணாண்டி

தூய உடை நாகரிக மாந்தர் கால்கள்
வோவோர் வருவோராய்ப்
பின்னும் வெளியிடையே
பிரதானமானதோர் பிம்பமாய் அவன்.
தீப்பிடித்த வீட்டுக்குள் புகுந்து
ஆட்களைக் காப்பாற்றுகையில் விளைந்த
காயங்கள் போல்
தன் உடம்பெங்கும்
எரிவதாய் உணர்ந்தவன்,
பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி
அடைப்புக்களைச் சரி செய்ததுபோல்
தன் உடம்பெங்கும்
நாறியதாய் உணர்ந்தவன்,
தன் உடல் எரிச்சல் தணியவும்
நாற்றம் களையவும்
வீதிக் குளத்துள்ளே
வெற்றுடலாய் இறங்கியவன்,
தன் அம்மண உடற்சிற்பத்தில்
ஒரு தூசு உட்காரச் சம்மதியான்;
ஒரு சிறு கைத்துண்டால் எப்போதும்
விரட்டி விரட்டித் தூசு
துடைத்தபடி இருக்கின்றான்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP