Monday, April 1, 2013

அங்கே

எங்கும் மாறுதலின் அவசரத்திற்கான
வேகம்போல் ஒரு வீரியம் அல்லது கலவரம்
அல்லது சூறாவளி

மரங்களும் தெருக்களும் மட்டுமல்ல.
விசிறலில் ஏறும் கனல்பொலொரு உக்ரம் பெற்று
எரியும் ஜூவாலைகளாயின என் தலைமயிர்களும்

காலம் கனிந்துவிட்டதென்றெண்ணிக்
கண்ணீர் மல்க நின்றேன்

அதிகாரக் கூச்சலோடு வழி கிழித்து
வந்துநின்றது தீயணைக்கும் வண்டி
ஆனாலும் அதற்குள்ளே
அங்கே தன் கொடியை ஏற்றிவிட்டது
தீ

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP