Thursday, April 18, 2013

ஓய்வுபெறும் ஆசிரியைக்கு விடைகூறல்

கோடைக் கொடுமைக்கு ஆறுதலளிக்கவோ
ஓய்வுபெறும் இந்த ஆசிரியைக்கு வாழ்த்துக் கூறவோ
வேம்பும் சரக்கொன்றையும் குல்மோஹரும்
பூச்சொரியும் இந்தக் காட்சி!

இக்கோடை விடுமுறையோடு
தன் பணியினின்றே ஓய்வுபெறுகிறாள் இவள்
58 வயதாயிற்றல்லவோ என்கிறது அரசாணை
ஐயையோ இவள் சின்னஞ்சிறுமி
எனக்கு இது நன்றாகத் தெரியும்

’கற்றுக்கொடு இவர்களுக்’கென
காலம்இவளைக் குழந்தைகள் முன் தள்ளியதால்
இவள் தன்னை ஓர் ஆசிரியராகவும்
குழந்தைகளைவிடப் பெரியவள் ஆகவும் எண்ணி
அப்பாதையில் நெடுந்தூரம் சென்று
ஓர் ஏமாற்றத்துடன் இன்று
உணர்கிறாள் தன்னை ஒரு குழந்தையாக
முதன்முதலாய் பள்ளிக்குள் நுழையும்
சின்னஞ்சிறு குழந்தையாக

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP