Thursday, April 25, 2013

நீர்க்கரை மரத்திலிருந்த ஒரு கனி

கனிந்த போதோ
பொட்டென்று விரைந்து வந்து
தொட்ட போதோ
தன் மையம் அழிந்து
எல்லையில்லா இப்பிரபஞ்ச முழுமையையும்
தழுவ விரியும் வட்டம் வீசியபோதோ
நீர்வாழ் உயிரினம் தவிர
யாரும் அறிய வொணா
நீரடியில் போய் அமர்ந்தது?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP