Thursday, April 25, 2013

வேலி மூங்கிற் கன்றுகள்

வேலி மூங்கிற் கன்றுகள் வளர்ந்து
நாளும் பறவைகளைக்
கூவி அழைத்தபடியே புதர்களாகி
வனம் நோக்கி நின்றது –
’வனமே நல்வேலி’ என்றமையோ?
இல்லை,
வேலி எனும் நம் திட்டத்தையே
கண்டு கொள்ளாத் திமிறோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP