Tuesday, April 23, 2013

கடவுள் சித்தம்

”உன்னுடைய எழுத்தாளர்கள், புத்தகங்கள்
படைப்புக்களைச சொல்”
(நான் உன்னைப் புரிந்து கொள்ள)
என்று நட்புக்கரம் வீசியபோது
நினைவில் தட்டியது யாரோ ஓர் அறிஞன் சொன்னது:
”உன் நண்பர்கள் யார் என்று சொல்
நான், நீ யார் என்று சொல்கிறேன்”

அன்று இரவு கடவுள் வந்தார்
”உன் உலகைப் பார்த்தேன்
உன்னைப் புரிந்துகொண்டேன்” என்றார்
உதட்டைப் பிதுக்கியபடி
”அய்ய்யா ஆஆ...” என்று அலறிவிட்டேன் அலறி
””இதோ, ஏதுமறியாத இந்தக் குழந்தையைப் பாருங்கள்
இதற்காகவாவது நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்”
என்றேன். என்னை ஊடுறுவி அறுத்தது
அவர் புன்னகை, அதே உதட்டுப் பிதுக்கல்
இரக்கமே தெரியவில்லை அவர் முகத்தில்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP