Saturday, May 11, 2013

அரவிந்தம்

நிச்சலனமான நீர் விரிப்பு

எல்லையற்ற துடிப்பினைத்
தன் சிறகுகளிலேந்திய வண்டு.

ஏற்பினால்
அம்மலரைச் சுற்றி
நீரில் நிகழ்ந்த ஒரு வட்டம்,

கதிரவனும் விண்மீன்கோடிகளும்
திகைக்க
இப் பிரபஞ்சம், தன்னையே
அதன் கழுத்தில் அணிவித்துக் கொண்ட
கோலம்,

ஆகுமோ, பெண்ணே
இப்போது
நான் உன் கழுத்தில்
அணிவித்துக் கொண்டிருக்கும்
மங்கல நாண்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP