Monday, May 13, 2013

இரு பறவைகள்

”இன்னுமொரு சந்தர்ப்பம்
இது நமக்கு” என –
ஒருநாள் விழிப்பில் நம்பிக்கை வைத்து
இதுநாள் வரைக்கும்
சோர்வுறாது
நம்மைக் கவனித்துக்கொண்டே
வந்துகொண்டிருந்த தெய்வமோ;

அவன் ஒரு புளுகுணி
அஞ்சாதே நீ
இதோ பார்
எக்கணமும் உனக்கொரு சந்தர்ப்பம்தான்
என ஒரு பெரும் பொழுதினைத்
தன் குரலால் திறந்து
சுட்டி நின்றது,
யாரது?
தெய்வத்தின் தெய்வமோ,
தீராத கருணையோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP