துரும்பு
முற்றுமுழு உறுதியுடன் இதைச் சாற்றுகிறேன்:
இநதக் கப்பல் உடைந்து விடும்.
உயிர்பிழைக்கப் போராடுகையில்
உடைந்து போன அக்கப்பல் துண்டுகளில்
ஒன்றுகூட நமக்கு உதவாது.
ஏனென்று நான் சொல்லத் தேவையில்லை.
ஆனால் ஒரு துரும்பு...
நம்மை எண்ணி எண்ணி
காலமெல்லாம் நமக்காகவே
கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்த
ஒரு துரும்பு...
நம்மைச் சுற்றிச் சுற்றி
வந்துகொண்டிருந்த
அத் துரும்பைப் பற்றியவாறு
நாம் பிழைத்துகொள்ள விழையும்போது
நம் கைபட்ட மாத்திரத்தில்
அத் துரும்ப ஒரு படகாகும்.
தேவைப்பட்டால் ஒரு கப்பலுமாகும்.
உடையாது அக்கப்பல் ஒரு நாளும்.
உடைந்தாலும்
அதன் ஒவ்வொரு துண்டும் துரும்பும் கூ
ஒரு கப்பலாகும்.