Thursday, May 23, 2013

கண்ணீரின் பூர்ணிமை

மவுனமான
இந்த அழுகையின் காரணம்
என்ன என்று தேடுகையில்
மனிதர்கள் நீங்கலான
மழலை உயிரினங்கள்
எதுவும் இதற்குக் காரணமில்லை
என அறிந்தேன்.

துயரையும்
துயரின் சங்கிலித்தொடர்ப் பயணத்தையும்
கண்டடைந்த அதிர்ச்சியோ காரணம்
என்று காண்கையில்
நீ வந்தாய்
காண்கையிலெல்லாம் முகிழ்க்கும்
கண்ணீரின் பூர்ணிமையுடன்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP