Thursday, May 30, 2013

எல்லா உயிரினங்களுக்கும்

எல்லா உயிரினங்களுக்கும்
வழி தெரிந்திருக்கிறது.
இப்போது எனக்கும்.

நீருக்குள்ளிருந்து
மேலெழுந்த நிலா
தன் வழி வீசிக் காட்டி நின்றது
நீர்மேல்.

அவ்வளவுதான்! என
மகிழ்ந்து சிரித்தது,
நீருக்குள் குதித்து நின்ற
என்னில் மெய்சிலிர்த்த நிலா

பாதையென்று எதுவுமில்லை;
காண்பதுவே வழி என்றது
பெரு வெளியொன்றில் முழுநிலா,
காண்பான் கண்களின் ஆழத்தில் ஒளிர்ந்தபடி,
கண்ணீர் நனைந்த கன்னங்களை முத்தமிட்டபடி.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP