Wednesday, May 22, 2013

அந்த ஒளி

கேளிக்கை ஆயிரமும்
சுவைகள் கோடியுமான
தன் படைப்புச் செயல்களையெல்லாம்
விட்டோடிய
பின்னோட்டமும்
ஸ்தம்பித்துநின்ற வேளைதானோ
பளாரென்று
முழுநிலவாய்ப் பூத்து நின்றது
அந்த ஒளி?
மண்டியிடவைக்காத
கண்ட்டைதல்.
வாய் அடக்கிய பெரு மவுனம்
உளறல்களால் தீண்டமுடியாத
பேரிசை
எப்போதும் தன் பாதுகாப்பிற்காய்
தன் முடிவைத்
தன் மடியிலேயே வைத்துக்கொண்டிருக்கும்
தொடக்கம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP