Monday, May 20, 2013

எதைக் கண்டு...

எதைக் கண்டு நொந்து அங்கே
நின்று விட்டாய் நீ?

எளிய மனிதர்கள் எவரும்
இதற்குக் காரணமில்லை எனும்
உண்மையின் ஒளியில்
இனியாவது நம் வாழ்வை
நாம் இயற்றிக் கொள்ளலாகாதா?
கடுங் கேடையின் நடுவில் தானன்றோ
காலங் காலமாய் வசந்தம்
தன் எழில் பேணிக் காத்துக்கொண்டிருக்கிறாள்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP