Wednesday, May 29, 2013

இனியொரு குன்றிமணியளவு

இனியொரு குன்றிமணியளவு
கூடுதல் துயரும்
என்னைக் கொன்றுவிடும் என்றே
நடுநடுங்கிக் கொண்டிருந்தேன்.

பெருநலம் நாடி
இயற்கையின் பேரெழிலிலிருந்து
வந்து தழுவும் காற்றும்
தோற்கத் தகுமோ?

வீடு வந்து
இரவு உணவு வேளை
ஒரு மாம்பழத் துண்டின்
தீஞ்சுவைத் தீண்டலில்
கண்ணீர் பொங்குகிறது
தீராத ஓர்
அன்பை எண்ணி.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP