Tuesday, May 7, 2013

ஒரு நாளும் கலையாத

ஒருநாளும் கலையாத
மலைமுகடுகளின் தியானம்;
ஓடிவரும் நதிகளினை
வாரி அணைக்கும் திரைகடலின்
பாறை உலராப் பேணல்;
நிலவு மேலெழும்பிப்
புவி நனையப்
பொழியும் ஒளி;
வண்ணமும் வாசமும் வடிவுமாய்
மலர்கள் மலர்ந்து மலர்ந்து
வெளிப்படுத்தும் காதல்;
கனியும் கிழங்கும் தானியங்களுமெனக்
குன்றாத செல்வக் கொடுப்பினைகள்.

திட்டமிட்டுக் காக்கப்படும்
தோட்டவெளிக்குள்
கொழு கொழுவென்று
செழித்து வளர்ந்து
பூரித்து நிற்கும்
தாவரங்கள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP