Friday, May 24, 2013

கவிதை என்பது...

காதலேயான பெண்போலவும்
களங்கமின்மையேயான குழந்தைபோலவும்
வண்ணங்களும் ஒத்திசைவுமேயான
இயற்கையைப் போலவும்
இருள் கண்ட இடமெல்லாம்
விழிக்கும் ஒளி போலவும்
முரண்கண்ட இடமெல்லாம்
தோன்றும் துயர் போலவும்
கவிதை என்பது
காதலின் பாடல்.
கொஞ்சும் அதன் கற்பனைகளோ
துன்ப வேளையிலும்
உடன்வரும் விளையாட்டுத் தோழன்.
தனிமையைக் கலைத்து
உயிர்வாழ்வைக் கொண்டாடும்
மானுடக் குழந்தைகள் இருவர்.
நீயும் நானும்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP