Thursday, May 9, 2013

ஏமாற்றம்

அப்படியானால்
உணரப்பட வேண்டியதை யெல்லாம்
உணர்ந்ததாலில்லையா,
ஒளியிலும் காற்றிலும் மகிழ்ந்தபடி
உயிர்வாழ்தலிலேயே இன்பம் காண்பதே
வழி என்றுணர்ந்தாலில்லையா,
வேட்டை வாழ்க்கையினைத்
தன் வாரிசுகளுக்குக் கைமாற்றிவிட்டு
உடல் தளர்ந்து ஓய்ந்த வாழ்வில்
வேறு வழியில்லை என்றுதானா,

அந்த மலர்த் தாவரம் –
அது சற்றே ஏமாந்து சோரும்படி
அதன் முன் வந்து நின்றார் அவர்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP