Friday, May 24, 2013

பூர்வீகம் சொர்க்கம்

பூர்வீகம்
சொர்க்கம்.
என்றாலும்
பிறந்து வளர்ந்ததெல்லாம்
இங்கேதான்.
அவ்வப்போது அவ்விடம்
போய் வருவதுண்டு என்றாலும்
நமக்கு வாழக் கொடுத்துவைத்திருப்பது
இந்த நரகம்தானே அய்யா.
இந்த நரகக் குழிக்குள்ளும்
பூர்வீக வாசனைதான்
நம்மைக் காப்பாற்றிவருகிறது
என்றறிந்தோனால்
சும்மாவிருக்க இயலுமோ அய்யா.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP