Saturday, June 1, 2013

நடை வண்டி

நான்கு சுவர்கள்
காலம் காத்தபடி தொடர்ந்துவரும்
தட்டுமுட்டுச் சாமான்கள்
அம்மா, அப்பா,
சித்தப்பா, சித்தி
சகோதரர்கள் மற்றும்
உற்றார் உறவினர் சுற்றத்தார் ஜாதிசனம்
உன்னைச் சுற்றிலும்.
நீ சுற்றிவர.

தளர் நடைச் சிசுவே,
என் தேவ குமாரனே!
உனக்குக் கொடையளிக்கப்பட்டிருக்கும்
இந்த நடைவண்டி,
யாவர்மீதும் முட்டி முட்டி நிற்க,
கண்டு சிரிப்பவர்களை
உன் பொக்கைவாயும் நிமிர்ந்து சிரிக்க
காலமும் நீ இங்கேயேவா சுற்றிக் கொண்டிருப்பாய்,
என் கண்மணீ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP