Wednesday, June 12, 2013

கும்மாளம்

சகலமும் மயங்கிச்
சித்திரமாய்ச் சமைய
மரத்தடியில் தன்பாட்டுக்குக்
குழல் வாசித்துக்கொண்டேயிருக்கிற
கண்ணன்

படம் வரைந்து முடித்து
கழுவிக் குவளையில் போட்ட
தூரிகையாய் இருக்கையில்,

மூளைக்கு மேலே
தொங்கும் விளக்குச் சுடரின்
மின்னலடித்த ஒளியில்
பளிச்சிட்டது:
கூட்டங் கூட்டமாய்க்
கும்மாளியிட்டுச் சிரிக்கும்
குளித்துக் கரையேறாத
கோபியர்கள்!

’ரூமப் பூட்டிட்டு
எங்க கௌம்பியாச்சு தொர?’

’ஆடைகளைக் கவர்ந்துவர’

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP