Thursday, June 13, 2013

வானை நோக்கி ஒரு ரோடு

நகரத்துச் சந்தடி,
நெருக்கி நெருக்கி அடைத்து மறித்து
முறைத்துத் தள்ளும்
கட்டடங்கள், வாகனங்கள்
எல்லாம் கடந்து...
வானக் குடை முழுசாய்
விரிந்த வெளிப் பூமி,
நிலவாகக் காணும் வெயில்,
ஏக மௌனம்,
எங்கிருந்தோ உதித்தவர் போல்
ஆணும் பெண்ணுமாய்ச் சிலர்
சாலை அமைக்கும் காட்சி
எங்கே?
சாலை நேரே கண்ணெட்டும் தூரம் வரை
வீடோ ஊரோ ஏதுமில்லை;
அடிவானம் அன்றி.
அருகே
தூளி ஒன்றைத் தாலாட்டும் தாயாய்
தா(ழ்)வாய்க் கவிந்த கருவைமரத்தில்
கனிகனியாய்க் காய்த்துக் குலுங்கின
கஞ்சி நிறைந்த தூக்குச் சட்டிகள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP