Sunday, June 16, 2013

நன்றி

தனிமை,
குளத்தில்
இறங்கினான்.
கொஞ்ச நேரத்தில்
குஞ்சு மீன்கள்
கூட்டமாய் வந்து
மொய்த்தன தனிமையை.
கண்டு நின்ற தாமரைக்
குடும்பம் அசைந்து
நன்றி சொல்ல
இவன்
பாதையோரம்
நிறுத்தி வைத்த
சைக்கிள் ஹாண்டபாரில்
முறுவல் பூத்தது
ஒரு வெள்ளைத் தாமரை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP