Monday, June 17, 2013

இறங்க வேண்டிய இடம்

மழையூடே பயணம்
மனம் நனைந்து குளிரும்
ஆட்டோ டிரைவர்
முதுகோடு முகம் வைத்து
சுவாசிக்கத் தவிக்கும் பிரியம்
’யோசனைகளிலேயே நீ காலத்தைக்
கழித்து விட்டாய் மனமே!
இறங்க வேண்டிய இடம்
வந்தது இறங்கு’ என்று
வண்டி நிற்கும்
உலுக்கலுக்கு ஒப்புதலாய்
தலையசைத்துக் கொள்ளும் மனசும்.
மணிபர்ஸுத் துழாவலுடன் அம்மா
’ஒன்னரை ரூபாயா ஒன்னே முக்காலா’-
பேரத்தை மீண்டும் கிளற
டிரைவரின் கண்கள் எட்டி
அம்மாவின் முகத்தை எரிக்க
அவனுள் புகுந்து
பொசுக்கத் தொடங்கும்
முடிவில்லாப் பயணம் ஒன்றின்
ஆரம்பம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP