Wednesday, June 26, 2013

மலையடிவாரத்தில் மழை

குளித்துக் கரையேறிய பெண்ணொருத்தியோ
கோதும் காற்றிற்
கூந்தலுலர்த்தும்
மலைச் சரிவு?

மீண்டும் மீண்டும் பொழிவதற்கோ
மேகம் மேகமாய்
அவள் கூந்தல்?

கொள்ளை இன்பமும்
குறுகுறு நடையுமாய்
திருமபித் திரும்பிப் பார்த்துச்
சிரித்துச் சிரித்து ஓடும் நதி
அதனை எட்டிப் பிடிப்பதற்கெனவே
சரசரவென ஓடிவரும் அவள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP