Friday, June 21, 2013

மின்வெட்டு

கிணற்றை உறிஞ்சிக்
கொட்டும் குழாய் நீர்
பொட்டுனு நிறுத்தப்பட்டது
தோட்டக்காரன்
(குழாயடியில் சுகித்துக்கொண்டிருக்கும்)
உன்மீது கொண்ட
பொச்சரிப்பினாலல்ல

’பின்னே?’

அண்ணாந்து பார்,
கண்ணீரென
சில சொட்டுக்கள் உதிர்த்துவிட்டு
வாய்பிளந்து உன்னை நோக்கும்
குழாய் முகச் சூனியத்தை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP