Sunday, June 2, 2013

இந்தக் கவிதைத் தொழிலில்

இந்தக் கவிதைத் தொழிலில்
அவனது திறமையென்று
என்ன இருக்கிறது?
இருப்பதெல்லாம்,
அமைதியான இரவு
விரிந்த வானம்
ஒளிரும் நிலவு
புனல் தழுவ நெகிழும்
பாறைகளும் நாணல்களும்;
தனக்குள்ளே
துளைந்துலவும் மீன்களுடன்
பாய்ந்துகொண்டிருக்கும் நதி;
அசையாது
ஒரு தூண்டிலுடன் அமர்ந்திருக்கும்
அவன்.
வேறென்ன?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP