Friday, June 21, 2013

ஒரு சந்தியா காலம்

குளக்கரை மேடு
வானம் காட்டும்
போய் நின்றாலோ
குளம்தான் சிரிக்கும்

வெட்கச் சிரிப்புடன்
இறங்கிய சந்தியை
குளித்துக்கொண்டிருக்கிறாள்
குளத்துக்குள்ளே

உனது சோகங்கள் தரித்த
உரு ஒலி நிசப்தம்
யாவும் கருப்பாக
நீங்கும் கருப்பாக
குளக்கரை மேட்டில்...

உழவு மாட்டுடன், தோளில்
உழுத கலப்பையுடன்...
கஞ்சிக் கலயம்
புல்லுக் கட்டு, விறகு
இடுப்புக் குழந்தையுடன்...
ஆட்டு மந்தை செலுத்தும்
கைக்கோலுடன்...
டாக்கிஸிலிருந்து தாபிக்கும்
காதலன் பிளிறலுடன்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP