Saturday, June 29, 2013

தண்ணீர்க் குடம்

தெருப் பைப்பில்
நாபிக் கொடியாய் விழும் நீரைச்
சுருதியுடன் உட்கொண்டு
மனம் நிரப்பிப் போன – தாய்
அழுகையாய் சுருதிமாறி
தூக்கி இடுப்பில் வை – என்னைத்
தூக்கு தூக்கு என்றேங்கும்
நீர்க்குடம் எடுத்துத் தன்
இடுப்பில் அமர்த்திக் கொள்ள;
பொக்கை வாய்ச் சிரிப்புச் சிரிப்பால்
காணும் சேலை யெல்லாம்
சிலிர்க்க நனைக்கும் அது
அப்புறமும்
அரவாகத் தொங்கி அசையும்
அக் கையும் அணைய வேண்டி
அடம் பிடிக்கும்
அலம்பி அலம்பி – அவள்
சிற்றிடையில் அழுந்தி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP