Monday, June 3, 2013

இன்னும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்

தாய்மீதும்
இயற்கை மீதும் கொண்ட
காதலுக்கு இணையாய்
பெண்ணவள்தன்
முதற் காதலும் வியப்பின்பமும்
அவள் தந்தை தனயரிடமும்
தொடங்கியிருந்ததாலன்றோ
இன்னும் பிழைத்துக்கொண்டிருக்கிறார்
இந் நச்சுலகைப் படைத்துத் துயருறும்
காதலறியா ஆடவர்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP