Wednesday, June 12, 2013

ஒற்றைச் சேலைக்காரி

பம்பு செட்டு தோறும்
குரூப் போட்டோவுக்குப்போல்
உற்றுஉற்று நிற்கும்
அம்மண அம்மணத் தென்னந்தோப்புகள்

குளித்து முடித்த ஒரு
ஒற்றைச் சேலைக்காரி
நீல நீளப் புடவைக்காரி
ஈரப்புடவையின்
ஒரு சுற்றால்
தன் அம்மணம் மறைத்து
மறு கோடியை
ஒரு அம்மணத் தென்னையின்
இடையில் கட்டி
காத்திருந்தாள்
காத்திருந்து
தன் ஒற்றைச் சேலையையும்
அம் மரத்தைச் சுற்றிக் கட்டிவிட்டு
அம்மணமாய்த் தான் நடந்து
மறைந்து போனாள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP