Thursday, June 13, 2013

பூப் பறிப்பு

கவனிப்பாரற்ற
பொழுதுக்
குளத்திலொரு தாமரையைக்
கைநீட்டிப் பறிக்கப்
பார்க்கிறது ஒரு சிறுமி
சேறும்
சிக்கல் கொடியும்
அறியாத ஆழமும்
நலுங்கும் நீரில்
காட்டும் பயம்.
தாமரை இலை நீர் சிரித்துக்
கொடுக்கும் தைரியம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP