Thursday, June 6, 2013

அன்னவர் நீர்மை

தாவரங்கள்
நீர் நிலைகள்
காட்டு விலங்குகளுக்குள்ளே
பேராசைமிக்க வணிகனாகி
பேர்புகழைக் காமுற்று
காசுள்ளவர்களையும் பிரமுகர்களையுமே
தேடித் தேடிப் போய்ப்
பல்லிளித்துப் பேணுகிற
ஒரு கோணங்கி உண்டோ?
அன்னவர் நீர்மையினால்
அடிமைகளும் குற்றங்களும்
துயரங்களுமுண்டோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP