Saturday, June 22, 2013

முகத்துக்கெதிரே

கரையில் உதிர்த்த ஆடைகள்
காற்றிலே துடிக்கும்போது
குளத்தில் நீர் ஆடும் பெண்கள்
கோபியராய் எண்ணிக் கொள்வர்.
தாமரையாய் முகமும் சிவக்கக்
’கண்ணனை எங்கே?’
எனத் தேடா
பறிகொடுத்த ஆடை பற்றித்
தவிப்பேதும் காட்டிக் கொள்ளா
சொரணையற்ற முகத்துக்கெதிரே
காட்டுவான் முத்து நீரில்
வானவிற் சேலை ரகங்களை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP