Monday, June 24, 2013

நதிக்கரை மர நிழல்கள்

நிர்வாணக் கோபியராய்
கரையெட்டிய மரங்கள்
கால்களில் மோகம் வளர்த்து
நதிநீரை நோக்கி ஓடும்
தலையிலே மோகம் வளர்த்து
வானத்தை நோக்கி இறைஞ்சும்.
மோக
நிழலுக்குள் நனைந்தபடி
மனிதர்கள் போவர் வருவர்
குளித்துக்
கரையேறியவர்தான் யாரோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP