Sunday, June 2, 2013

நோக்கமில்லாததொரு அன்பு

நோக்கமில்லாததொரு அன்பு
என்னை முத்தமிட்டது கண்டேன்.
இது போதும் எனக்கு,
இந்த அகண்டம் உள்ளவரை.

அதற்குமொரு நோக்கமிருந்தது
கண்டேன்.
அதைப் பாடினேன்.
பாடுவேன்
இந்த அகண்டம் உள்ளவரை.

துறவு என்றும் உறவு என்றும்
ஏதாவதொரு சொல்லுக்குள் பிடித்து
அடித்துக் கொன்றுவிடத்
துடிக்கும்
மனிதர் கைக்குள் அகப்படாது
புவிமலரைச் சுற்றிவரும் தும்பியாகத்
திரிவேன்,
இந்த அகண்டம் உள்ளவரை.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP