Friday, June 14, 2013

நான்

தன் தாயகம் விட்டு வெளியேறும்
தொலைதூர யாத்ரீகனைப் போல்
ஆழமான திரும்பிப்பார்த்தலுடன்
ஈர உடுப்புடன் – ஒரு பெண்
இம்மருத மரங்களை விட்டு விலகிச் செல்கிறாள்
இவ்வாற்றங்கரையருகே

நிர்வாணக் கோபியராய்
நீலவானை நோக்கி
(கை கொண்டு முலை மறைத்து
தொடைகள் பின்னிக் குறி மறைத்து)
ஆடைக்கு இறைஞ்சுவார்கள்
மருதமரக் கன்னியர்கள்
கண்ணன் நான்
இங்கே தான் ஒளிந்து நிற்பதைக்
காணாமல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP