Monday, June 24, 2013

சிரசாசனம்

மல்லாடி மல்லாடிக்
களைத்து
வெளுத்து
எரியும் மூளையைச்
சாந்தப்படுத்த
தியானம் எழுந்தது உடன்
முகஞ் சிவக்க விழி சிவக்கப்
பூத்தது ஒரு
மோனத் தாமரைத்
தடாகம் அதில்
நலுங்காமல் நீந்தி
அலம்பி விடாமல் எழுந்து
நிமிர்ந்து
சுவாசிக்கையில்
மேலெழுந்த தடாகமே
மேகமாய்ப் பொழிந்து
குளிப்பாட்டிற்று தொடர்ந்து
தாமரை தான் சூரியனாய்த்
தொங்கிற்று மேலே
என் தலைக்குள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP