Tuesday, June 4, 2013

எந்த ஒரு மதமும்

எந்த ஒரு மதமும்
அம்மதம்
அம்மதம் அல்லாதார் எனவிரண்டாக
அவனைத் துடிதுடிக்க அறுத்துத்
துண்டிக்க முயல்வதென்ன?


அறைகுறை அறிவின் ஆபத்துக்களறியாது
உலகம் புல் மேய்ந்து கொண்டிருப்பதென்ன?

எல்லாவற்றையும் அணைத்தபடி
எல்லாவற்றிற்கும் அப்பால்
எத் தீவினைகட்கும் பிடி கொடாது
தன்னந் தனியாய்க் கனன்று கொண்டிருப்பதென்ன,
மெய்யறிவாளன் கண்ட மதம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP