Monday, June 17, 2013

நாய் மோளும் பாறை

வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதிநீரில் கிடக்கும்
லயித்து
குளித்துக்
கரையேறி விட்டோம் என
நதியோரம் நெஞ்சை
நிமிர்த்தி நிற்கும் பாறைக்கு -
விரைந்து வந்து நாய் ஒன்று
நனைத்துக் காட்டும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP