Friday, June 28, 2013

மனுஷ வாசம்

நீர்க் கரைக்கு இறங்கி வந்த
காகங்கள் குளித்து முடித்துக்
கூட்டங் கூட்டமாய்ப் பறந்து செல்லும்
வானில்
கருமேகங்கள் திரண்டு மறிக்கும்

மழையில் நனைந்த காகங்கள்
மரக்கிளைகள், மாடிச்சுவர் தந்திக் கம்பிகளில்
எல்லாம் ஒடுங்கி அமர்ந்து
அனைத்தையும் நினைத்துப்
பார்த்து முடிக்கும்; எனினும்
மீண்டும்... மீண்டும்...

கங்குலுக்குப் பின்னாலே
புலரியும் வருந்தி நிற்க
யாருக்கும் புலப்பட விரும்பாது
குளித்து முடித்துப் போய்விடப் பார்க்கும்
பெண் குட்டிகள்...

பஸ் குறித்த குறை நேரத்துள்
குளித்துக் கரையேறுவதாய்ப் பறக்கும்
டூரிஸ்ட கூட்டம்...

கானகத்தில்
கொஞ்சமும் எதிர்பாரா வேளையில்
திடீரென்று காட்சியளிக்கும்
மனுஷ வாசம்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP