Sunday, July 14, 2013

பனங்காட்டில் ஒரு பதனீர்க்காரி

என்ன ஆச்சரியம்!
கருங் கருந் தூண்களாய் நிற்கும்
சாவின் உச்சியில்
பத்தி விரித்து விரித்துச் சீறி நின்ற பாம்புகள்
என்னமாய் மயங்கிக் கிடக்கின்றன
அவள் காலடியில்!

அப்படியே கையிலெடுத்து
அதன் உடம்பிலிருந்தே
அதைக் கட்ட
ஒரு கீற்றும் உரித்து, கட்டி,
அதிலேயே பருகக் கொடுக்க
பானையில் வைத்துக் காத்திருக்கிறாளே
பனைகள் முன்னே பதனீர்க்காரி

பார்வைக்குக் கிடைத்தும்
பருகக் கிடைக்காமல் போய்விடுமோ
எனப் பதறுகின்ற நெஞ்சின்
ஏக்கத்தைத் துழாவிப் பிடித்துப்

பருகுகிறேன் பருகுகிறேன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP