Thursday, July 18, 2013

யார் தனிக்கட்டை?

அவர்கள் காம்பவுண்டில் அடிக்கடி
சாக்கடை பெருகி
முற்றத்துக்கு வந்துவிடும்
(அவனும் ஒரு பங்காளிதானே அதில்)
அவன் மனசோ அதன் மேல்
தாமரைகளைப் பிறப்பித்து
மிதக்கும்.
அவனைப் பார்க்கும் கண்களெல்லாம்
’அவனுக்கென்ன தனிக்கட்டை’
என்று அசூயைப்படும்.
சரிதானா அது?
முற்றத்துச் சாக்கடை
இவர்கள் எல்லோரின் ஏன புதல்வி,
யாருக்கும் தெரியாமல்
அவன் கதவைத் தட்டுகிற
சேதி தெரியுமா?
அவன் கதவைத் திறப்பான்.
வெட்கத்துடன்
தலைகவிழ்ந்து நிற்கும் அது.
விலக்கி நடந்தால்,
அது பார்க்கும் பார்வை
ஆளைக் கொன்றுவிடும்.
இட்ட அடிகள் தழுவி
எடுத்த அடிகளுக்கு ஏங்கியுமாய்
பாதம் பற்றிக் கெஞ்சும்.
முகச் சுளிப்பு கண்டு
கலங்கும்...
ச்சை!
அவனா தனிக்கட்டை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP