Tuesday, July 2, 2013

தள்ளு அவனது பார்வையை

படீர் படீரென
உள்ளங் கையால் தப்பிச்
சூரியனாய் சிரிக்கவை, சிரி.
கைகளில் அள்ளி
முகத்தோடு சேர்த்துப் பரவசமாகு.
வீசி வீசி நீந்தித்
தழுவிக் கொள்ளப் பார்.
முடியாது; கலங்கிவிடாதே.
பேசாமல் மிதந்து, ஆசுவாசி.
நிலை நீச்சலில் நில்.
இதழ் வைத்துப் பருகு;
அந்த இன்பத்தைக்
கொப்பளித்துக்
குளமெங்கும் பரவவிடு.
திகைத்து திகைத்து நிற்காதே.
உன் வட்டத்தை விரி
எப்போதும் இயங்கிக்கொண்டு.
மிதக்கும்
எல்லோரையும் அசைத்து
உறவாடு
உன் உடல்மீது பசியோடு
கரையோரம் வெறி’த்துக் கொண்டிருப்பவனைக்
கவனிக்கவே கவனிக்காதே, பெண்ணே!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP